மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

23

சென்னையில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல், அவர் இறந்த மூன்றாவது நாளிலேயே பெயிண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி அரிகிருஷ்ணாபுரம் அம்மன் நகர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (43). கட்டிடப் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுந்தரி (37).

இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி சுந்தரி திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மனைவி மறைந்த சோகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர், வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி இறந்த 3-வது நாளிலேயே கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால், உதவிக்கு உடனடியாக மாநில உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் (044-24640050) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.