வவுனியாவை அதிரவைத்த மகாவித்தியன்ஸ் நடைபவனி

1150

வவுனியா நகரை உற்சாகத்தில் ஆழ்த்திய மகாவித்தியன்ஸ் பழைய மாணவர்களின் பிரம்மாண்ட நடைபவனி நேற்று (01.08.2026)கோலாகலமாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக முன்னேறியது.

பாடசாலையின் பெருமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், மகாவித்தியன்ஸ் மாணவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். இசைக்குழுக்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்த நடைபவனி காரணமாக வவுனியா நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டதுடன், பொதுமக்களும் வீதியோரங்களில் திரண்டு நின்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.