ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பு..!

724

நாளை (07) நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்தார்.

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்துடன் தொடர்புடைய 11 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (05) அதிகாரிகளுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு முன்னரும் பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப் போவதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்த போதும் பின்னர் அவற்றை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.