9,10,11 திகதிகளில் கிளிநொச்சியில் நடமாடும் சேவை..!

426

தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நபர்களுக்காக கெபே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும்09, 10, 11 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றும் அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு வசதி செய்து கொடுக்கவென இந்த நட மாடும் சேவை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களம், நீதியான தும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் என் பன இணைந்து இந்நடமாடும் சேவையை நடாத்தவுள்ளன

2012 வாக்காளர் இடாப்புக்கு அமைய வட மாகாணத்தில் 85,000 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப் பதாகவும் அவர்களில் பலருக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியா திருப்பதற்கு அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாமையே காரணம் என தெரியவந்துள்ளது.

2013.07.09 காலை 9.30 – 4.00 ஸ்கந்தபுரம் பொது சந்தை தொகுதி கட்டடத்தில் வன்னேரிகுளம், ஆணைவிழுந்தான்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம்,கண்ணகைபுரம், கோனாவில், ஊற்றுபலம், புதுமுறிப்பு மக்களுக்கு நடமாடும் சேவையில் இடம்பெறவுள்ளது.

2013.07.10 காலை 9.30 – 4.00 கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் பொன்னகர், பாரதிநகர், மலையாள புரம்,விவாகனந்த நகர், கிறிஸ்ணபுரம், உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, அம்பால்குளம்,செல்வநகர், ஆனந்தபுரம், தொண்டமான் நகர், கனகாம்பிகை குளம், ஆம்பல் நகர்,திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம் கிளி – நகரம், பன்னன்கண்டி, கங்காபுரம்,துறைநகர் தெற்கு, துறைநகர் வடக்கு, கணேசபுரம், ஜெயந்தி நகர், பெரிய பரந்தன்,உருத்திரபுரம் வடக்கு, உருத்திரபுரம் தெற்கு, உருத்திரபுரம் மேற்கு, சிவநகர் மக்கள் கலந்து கொள்ள முடியும்.

2013.07.11 – காலை 9.30 – 4.00 வட்டக்கச்சி கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் மாவடியம்மன், ராமநாதபுரம், சிவிக் நிலையம்,மாயவனூர் பகுதி மக்கள் கலந்துகொள்ள முடியும்.