ரயில் சேவை முடக்கம்: பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை..!

655

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறு போக்குவரத்துச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வரை பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.