மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி இன்று தொடரும்..!

397

cricket

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டி இன்று தொடரவுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.