நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் பிரதானமாக இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பொது எதிரணியின் சார்பில்பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்ற நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையிலேயே கடுமையான போட்டி காணப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது தடவையாக போட்டியிடுகின்றார்.
கடந்த 2005ம் ஆண்டு மற்றும் 2010ம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
மாவட்டங்கள் வாக்காளர் எண்ணிக்கை
கொழும்பு 15,86,598
கம்பஹா 16,37,537
களுத்துறை 8,97,349
கண்டி 10,49,160
மாத்தளை 3,79,675
நுவரெலியா 5,34,150
காலி 8,19,666
மாத்தறை 6,23,818
அம்பாந்தோட்டை 4,62,911
யாழ்ப்பாணம் 5,29,239
வன்னி 2,53,058
மட்டக்களப்பு 3,65,167
திகாமடுல்ல 4,65,757
திருகோணமலை 2,56,852
குருணாகலை 12,66,443
புத்தளம் 5,53,009
அனுராதபுரம் 6,36,733
பொலன்னறுவை 3,07,125
பதுளை 6,20,486
மொனராகலை 3,39,797
இரத்தினபுரி 8,10,082
கேகாலை 6,49,878
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,504,490
2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500
2015 ல் 14,15,990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி