வவுனியா முருகனூரில் புதையல் விவகாரம்: பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தினால்பிணையில் விடுதலை..!

436

vavuniy

கடந்த மாதம் 30 ம் திகதி வவுனியா முருகனூரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் புதை பொருள் களவாடல் என்ற சட்டத்தின் கீழ் சாமி கலையாடிய ஒரு பெண் ,ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யபட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடந்த 5 ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

இது பற்றி ஆலய நிர்வாக சபையினர் கூறியதாவது பல ஆண்டுகளுக்கு பிறகு அண்மையிலே இவ்வாலயத்தில் மஹா கும்பாபிசேகம் இடம் பெற்றது சில நாட்களின் பின் எழுந்தருளி விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டது இது பற்றி பொலிஸிலும் புகார் செய்யப்பட்டது அதன் பிறகு மதங்கள் சார்ந்த சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப எமது ஆலய பக்தர்களும் சமூகமும் இணைந்து தத்தம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சுதந்திரமான முறையில் சாமி பார்த்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் இது தொடர்பாக பொலிசார் உதவியும் நாடப்பட்டது

கடந்த 30 ம்திகதி சாமி கலையாடிய பெண் சாமியார் ஆலயத்தின் பின் புறத்திலே விநாயகர் திருவுருவம் இருப்பதாகவும் அவ்விடத்திலே கிடங்கினை வெட்டுமாறு கூறிய போது தொண்டர்கள் கிடங்கினை வெட்டிய போது அவ்விடத்திற்கு வந்த 119 பொலிசார் புதை பொருள் களவாடல் சட்டத்தின் கீழ் பெண் சாமியார் .சாமியாரின் குழந்தை .ஆலய தொண்டர்கள் ,பரிபாலன சபை உட்பட எட்டு பேரை கைது செய்தனர் .விசாரணைகளின் பின் கடந்த 5ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் அடுத்த வழக்கு 21 ம்திகதி நடை பெறவுள்ளது

இது பற்றி ஊர்மக்கள் கூறியதாவது ஆலய விக்கிரக களவு தொடர்பாக 119 பொலிசிக்கு அறிவித்த நபரை சந்தேக படுவதாகவும் அவரை பொலிசார் விசாரித்தால் உண்மை தெரிய வரும் எனவும் கூறினர் இக் கைது விடயம் தொடர்பாக பிரதேச செயலர் ,கலாசார உத்தியோகத்தர் சிவில் பாதுகாப்பு குழு, பாராளு மன்ற உறுப்பினர்கள் என பல தரப்பினரிடம் கூறிய போதும் இது வரை ஆலயத்தை வந்து பார்க்கவில்லை என ஆதங்கத்துடன் ஊர் மக்கள் கவலை தெரிவித்தனர்.