தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

381

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்ட போதும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் தமக்கு கிடைக்காமையை தொடர்ந்து இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அதில் கெமுனு விஜேரத்ன கலந்து கொள்ளவில்லை.