வவுனியா கோவில்குளம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலினால் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் சிவன் முதியோர் இல்லத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் 21/01/2015 புதன்கிழமை காலை 8.20 தொடக்கம் 10.20 மணி வரையான சுபவேளையில் திறந்து வைக்கப்படுவது இறையருளால் கைகூடியுள்ளது.
இந்த “சிவன் முதியோர் இல்லத்தினை” 21.01.2015 புதன் கிழமை சுபவேளையில் யாழ்ப்பாணம், நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் திறந்து வைத்து அருளாசி வழங்குவார்.
மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறுவவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் அறியத்தருகின்றனர் .
மேற்படி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் யாவும் வவுனியா நெற் இணையத்தின் மூலம் உலகெங்கும் பரந்துவாழும் எம் இன உறவுகளை சென்று சேரும் வகையில் எம்மாலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை வவுனியா நெற் நிர்வாகத்தினராகிய நாமும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.