இலங்கை முதலில் பந்துவீச்சு..!

406

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதி லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அபாரமான முறையில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா பெறும்.

ஏற்கனவே, இலங்கை, மேற்கிந்தி தீவு அணிகள் தலா 9 புள்ளிகளுடன் உள்ளது. ஓட்ட விகிதாசாரத்தில் இலங்கை அணியே (+1.019) முன்னணி வகிக்கிறது.

தற்போது இந்திய அணி 5 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் 3 அணிகளும் சமபுள்ளிகளுடன் இருக்கும். இதனால் ஓட்ட விகிதாசார அடிப்படையில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.