மகா சிவராத்திரி தினமான இன்று மன்னாரில் கோவில்கொண்டுள்ள கேதீஸ்வரநாதர் சமேத கௌரிஅம்பாள் திருவருள் புரிகின்ற திருக்கேதீஸ்வரத்தில் மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறது. ஈழத்தின் பாடல் பெற்ற தலமாகிய திருகேதீஸ்வரத்தில் நாடுமுழுவதும் இருந்து இம்முறை பெருமலவிலான பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர் .
பாலாவியில் நீராடி ஈர உடையுடன் அங்கு குடங்களில் தீர்த்த மெடுத்து கோவிலின் உள்புறம் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் அபிசேகம் செய்யும் நிகழ்வு இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை முதல் பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் தவில் நாதஸ்வர கச்சேரிகள் என்பனவும் பஜனை மற்றும் இறைபக்தி பாடல்கள் என்பனவும் இசைக்கபட்டு வருகின்றது .
இம்முறை பக்தர்களின் வசதி கருதி பெருமளவிலானஅரச தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் பக்தர்களுக்கு விசேட அன்னதான வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது …
வவுனியா நெற் செய்திகளுக்காக திருக்கேதீஸ்வரத்திலிருந்து பண்டிதர்