சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்ட ஜோதிகா!!

551

surya-jothika

சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம்.

ஆனால் சிஙகம்-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் சிவகுமார். முதன்முறையாக மகன் சூர்யாவுக்கு எஸ.எம்.எஸில் பாராட்டு மடல் அனுப்பினாராம். எத்தனை பேர் பாராட்டினாலும் பெற்ற தந்தையின் பாராட்டு உயர்வானது அல்லவா. அதிலிருந்து சூர்யா இன்னும் பரபரவென்று உற்சாகத்தில் இருக்கிறாராம்.

இப்படி அப்பாவின் பாராட்டு ஒருபுறமிருக்க சூர்யாவின் துணைவியார் ஜோதிகாவும் இந்த படத்தைப்பற்றி பலரும் சொல்வதைக்கேட்டு தானும் குழந்தைகளுடன் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்தாராம்.

அதையடுத்து வீட்டுக்கு வந்தவர் சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்டு விட்டாராம். அந்த அளவுக்கு உங்களது நடிப்பு மட்டுமின்றி ​பொலிஸ் சீருடையில் என் கண்ணே பட்டிருக்கும் அத்தனை அழகு என்று சூர்யாவை கொண்டாடினாராம்.

இதனால் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு மழையில் மிக்க சந்தோசத்தில் இருக்கிறார் சூர்யா.