இன்று நாடெங்கும் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு?

511

busஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1500க்கும் மேற்பட்ட பஸ் குழுக்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்திற்கு அமைய பஸ் கட்டணத் திருத்தங்கள் இடம்பெறாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை சில தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த பணிப் பகிஷ்கரிப்பு நியாயமற்றது என தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.