இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள்!

564

bala

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களிடம் திரைக்கலை பயின்றார்.

“சேது” திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பாலா இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

ரசிகர்களுக்கு தெரியாத ஒரு நடிகனை தனது “சேது” படம் மூலம் வெளிக்காட்டிய பெருமை பாலாவையே சேரும். அவர்தான் ’”சீயான்” விக்ரம். இதையடுத்து சூர்யா என்கின்ற நடிகனை நாம் அவ்வளவாக திரையில் கவனித்ததில்லை, அவரையும் வேறொரு கோணத்தில் “நந்தா” படம் மூலம் திரையில் காண்பித்து ரசிகர்களைக் கவனிக்க வைத்தவர்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது படங்கள் யதார்த்தம், இருள் என மனதில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியது என விமர்சன ரீதியாகப் பாரட்டப்பட்டது.

வவுனியா நெற் ரசிகர்கள் சார்பாக பாலாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..