முக்கோணத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா… இலங்கை இறுதிவரை போராடித் தோல்வி..!

733

eranga

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நாணயசுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 71 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி இந்திய அணி 202 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.

இறுதிய இந்திய அணி இறுதிவரை போராடி 49.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.