ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புவதற்காக துள்ளிக்குதித்து அறையிலிருந்து ஓடும் ரோபோ அலார கடிகாரம் ஒன்றினை இங்கிலாந்தின் பல்கலைக்கழக மாணவரொருவர் கண்டுபிடித்துள்ளார்.
உறக்கத்திலிருந்து எழுந்து பல்கலைகழக விரிவுரைகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்கு தடுமாறிய மாணவன் ஒருவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார். “கிளொக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள 2 டயர்களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடிகாரமானது 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடியது.
ஒரு முறை மட்டுமே ஸ்னஸ் செய்ய அனுமதிக்கும் இந்த கடிகாரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்தத்துடன் அறை முழுவதும் சுற்றி ஓட ஆடம்பித்துவிடும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் விரட்டிப் பிடித்து கடிகாரத்தின் சத்தத்தை நிறுத்தியேயாக வேண்டிய கட்டாயத்தில் எழும்பிவிடுவார்கள்.