வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப்பொதி வழங்கல் நிகழ்வு!!(படங்கள்)

641

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய்க்கான உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா தலைமையில் நேற்று (29.03) நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, தர்மபால, ஜெயதிலக்க ஆகியோரும், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மோகநாதன், உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணா, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் கெனடி, கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்துகொண்டனர்.

1 2 3 4 6 7 8 9 10 11