இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு இரண்டு சர்வதேச ஒரு நாள் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்து முடிந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் உரிய நேரத்திற்குள் பந்து வீச தவறியமையின் காரணமாகவே இப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் படி எதிர்வரும் தென்னாபிரிக்க தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை அஞ்சலோ மத்தியூஸ் இழந்துள்ளார்.