தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரேநாளில் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜியனி பினி ஆகிய மேற்படி 29 வயது சகோதரிகள் ஒரே தோற்றத்தைக் கொண்ட ராபயல், கப்பிரியல் மற்றும் எட்வார்டோ ஆகிய ஆண்களை திருமணம் செய்துள்ள னர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.