சிவகார்த்திகேயனின் சொப்பன சுந்தரி!

384

Siva-Karthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்துக்கு “சொப்பன சுந்தரி” எனத் தலைப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.

“கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்து வருகிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை “எதிர்நீச்சல்” படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் “மான் கராத்தே”வில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். “பட்டத்து யானை” ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப் படத்திற்கு “சொப்பன சுந்தரி” என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி பேசும் டயலாக் “சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா?”. புகழ்பெற்ற இந்த டயலாக்கை மனதில் வைத்துதான் இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்களாம்.

அதேபோல் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” தலைப்பும் “வின்னர்” படத்தில் வடிவேலு சொன்னதுதான். காமெடியாகப் பேசும் சிவகார்த்திகேயனுக்கு காமெடி நடிகர்களின் டயலாக்கில் இருந்து படத்தலைப்பு கிடைப்பது பொருத்தமான விஷயம்தான்.