கடந்த 8ம் திகதி காலமான வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் பூந்தோட்டம் இந்து மயானத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வவுனியாவின் கல்விச் சமூகமே ஒன்று திரண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர்கள், மாணவர்கள், வவுனியா கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள், வவுனியா பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவன ஊழியர்கள், வர்த்தகர்கள், பிரதேச மக்கள் என வவுனியா சமூகமே ஒட்டுமொத்தமாக அங்கு திரண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
-கலைதேவன்-
தொடர்புபட்ட செய்தி
வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!