இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் சூதாட்டம்?

390

lankaமேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இலங்கை – இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் போது கிரிக்கெட் பந்தயத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை டெல்லி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் பூத்கலன் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லலித் சொலங்கி (27 வயது), நிதின் சொக்கின் (27 வயது), பவன் சொலங்கி (30 வயது), மோஹித் குமார் (21 வயது) மற்றும் ஜிட்டேன்டர் குமார் (22 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல், செம்பியன் கிண்ணம் மற்றும் முக்கோண தொடர் என்பவற்றில் இவர்கள் 1.5 கோடி இந்திய ரூபா கிரிக்கெட் பந்தயம் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி கைப்பற்றப்ட்டுள்ளது. இலங்கை – இந்திய இறுதிப் போட்டியில் 154 பந்தயங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.