நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கெஹிண்டே அடெகோக் (Kehinde Adegoke) என்ற இளம்பெண்.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக இரவு வேளைகளில் உறங்கும்போது, தினந்தோறும் கனவில் பாம்பு ஒன்று தோன்றி மனிதனாக மாறி அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் பின்னர், பாம்பாக மாறி மறைந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், கனவில் வரும் பாம்பின் முகம் மனிதரை போன்று விசித்தரமாக இருந்தது. இதை என் தாயிடம் கூறும் போது அவர் என்னை நம்பவில்லை.
இறுதியாக மருத்துவரிடம் என் பெற்றோர் அழைத்து சென்ற போது பரிசோதனையில் நான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நான் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் ஏனெனில் நான் வேறு எந்த ஆண்களுடனும் உடலுறவு வைத்து கொண்டதில்லை என்று கூறும் இவர் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.
இவர் கூறுவதற்கு ஏற்றாற்போல இவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு அதிசயமாக கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பதைப்போல் கூர்மையான இரு பற்களும் இருந்துள்ளன. ஒரே ஒருநாள் மட்டுமே உயிர் வாழ்ந்த அந்த குழந்தை 29ம் திகதி இறந்துப் போயுள்ளது.
மேலும், மாந்தரீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட நைஜீரிய மக்கள் கெஹிண்டே அடெகோக்-கின் பாம்புக் கதையால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.