நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

443

4 கைகள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து சில நாட்களே ஆன நிலையில், இக்குழந்தையை பார்ப்பதற்காக அம்மாநில மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், இக்குழந்தையை விநாயகரின் அவதாரம் எனவும் கூறிவருகின்றனர்.

இந்த அதிசய குழந்தையை பார்க்க வந்த குந்தலேஷ் பாண்டே கூறுகையில், 72 மைல் தொலைவிலிருந்து இந்த அவதார குழந்தையை பார்க்க வந்தேன்.

எனது நண்பர் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பியபோது என்னால் நம்பமுடியவில்லை, ஏனெனில் போட்டோஷொப்பில் வேலை செய்து இவ்வாறு அனுப்பியிருப்பார் என கருதினேன்.
ஆனால், அந்த புகைப்படம் உண்மை என நண்பர் கூறியதால், குழந்தையை பார்க்க நேரில் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, கருவில் இருந்த இரட்டை குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக, இவ்வாறு நான்கு கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

Baby