சல்மானுக்கு 5 வருட சிறைத் தண்டனை : மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

350

Salmankhan

சல்மான்கான் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மும்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மதுபோதையில் காரைச் செலுத்தியிருந்த சல்மான்கான் மும்பையில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (06.05) இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது