வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்!!

641

Ele

வவுனியா வடக்கு கொல்ல புளியங்குளம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்துள்ளன.

ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா போன்ற பயன்தரு மரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்துள்ளன.

முன்பு இப்பகுதிகளில் யானைகளின் தொல்லை இன்றிக் காணப்பட்டதாகவும், மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.