குற்ற உணர்வின்றி உங்களால் தூங்க முடியுமா : ஜெயலலிதாவிடம் கேள்விகேட்கும் குஷ்பு!!

315

kushpu

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதா குற்ற உணர்வின்றி தூங்க முடியுமா என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப்பதிவு செய்துள்ள குஷ்பு, “விடுவிப்பு என்ற ஒரு வார்த்தை உங்கள் குற்ற உணர்ச்சியை போக்கிவிடாது. 18 ஆண்டுகள் நீதித்துறையை கேலிக்குரியதாக்கி இப்போது விடுதலையடைந்துள்ளீர்கள். ஆனால், உங்களால் குற்ற உணர்வின்றி உறங்க முடியுமா” என்று அவர் பதிவு செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் போதிய ஆதாரங்கள் இன்மையால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.

இந்தத் தீர்ப்பை முன்னிட்டு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.