வவுனியா கற்குழி பிரதேசத்தில் இன்று(12.05) ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சதாசிவம் சபாபதிப்பிள்ளை என்ற 61 வயது முதியவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவராவார்.
இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் , அதனாலேயே தூக்கில் தொங்கி மரணித்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.