பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!

335

Ele

ஹபரன – தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையிலும், பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹபரன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.