என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!

267

Mahinda

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி பழிவாங்கவே ரணில் முயற்­சிக்­கின்றார். ஆனால் சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நான் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களின் உற­வி­னர்­களை நேற்று நாரா­ஹேன்­பிட்டி அபே­ய­ராம விகா­ரையில் சந்­தித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மேலும் அவர் கூறு­கையில்,

இந்த நாட்டை தீவி­ர­வா­தி­க­ளிடம் இருந்து மீட்­டெ­டுக்க நாம் பாரிய தியா­கத்தை செய்தோம். இராணுவ வீரர்­களின் தியா­கமும் எனது அர­சாங்­கத்தின் துணிச்­ச­லுமே இந்த நாட்டை வெற்றிகொண்­டது. ஆனால் அவை அனைத்­தையும் இன்­றுள்ள அர­சி­யல்­வா­திகள் மறந்­து­விட்­டனர். அன்று இருந்த நிலைமை இன்று நாட்டில் இல்லை. இரா­ணு­வமும் மக்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்டு விட்­டனர். அன்று எம்­முடன் இருந்­த­வர்கள் இன்று விலை போய்­விட்­டனர். சேரக்­கூ­டாத கூட்டணிகள் இன்று ஒன்­றாக சேர்ந்து சதி செய்­கின்­றன.

நாட்டில் அபி­வி­ருத்­திகள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன. இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் அவர்­க­ளது குடும்பத்தின­ருக்கும் கிடைக்க வேண்­டுய சேவைகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. நான் சரி­யான பொரு­ளா­தார வளர்ச்­சியில் இந்த நாட்டை ஒப்­ப­டைத்தேன். ஆனால் புதிய அர­சாங்­கத்தின் குறு­கிய காலத்தில் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. அரச ஊழியர்களுக்கு சம்­பளம் கொடுப்­ப­தற்­கான நிதி அர­சாங்­கத்­திடம் இல்லை. அர­சாங்­கத்தின் நிதி முகா­மைத்­துவம் மோச­மான நிலையில் உள்ளது. குறு­கிய காலத்­தி­லேயே இந்த அர­சாங்கம் முட்டி மோதி­விட்­டது. நாட்டை எப்­படி ஆட்சி செய்­வது என்­பது இவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை.

இந்த நாட்டு மக்­களை பாது­காத்­தது யார் என்­பதை மக்கள் சிந்­தித்து பார்க்க வேண்டும். நான் மக்களுக்கு செய்த நன்­மை­களை மறந்­து­விட வேண்டாம். நாட்டில் மீண்டும் பாது­காப்­புக்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்தை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்ளது. ஆனால் இந்த அர­சாங்கம் அவற்றை கவ­னத்தில் கொள்­ள­வில்லை. புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை­களை இந்த அர­சாங்கம் நிறை­வேற்றும் வகையில் செயற்­ப­டு­கின்­றது. அர­சாங்கம் முழுமை­யாக பழி­வாங்­க­லையே செய்­கின்­றது. புலம்­பெயர் அமைப்­பு­களின் தூண்­டு­தலில் என்னையும் கைது செய்ய பிர­தமர் ரணில் முயற்­சிக்­கின்றார்.

அர­சாங்கம் எமது உறுப்­பி­னர்­களை கைது செய்­வதன் பின்­ன­ணியில் புலம்­பெயர் அமைப்­பு­களின் தூண்­டுதல் உள்­ளது. என்­மீது குற்றம் சாட்­டு­வதும் எனது குடும்­பத்தை குற்­ற­வா­ளி­யாக்­கு­வதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மட்­டு­மே­யாகும்.

நான் தேர்­தலில் தோற்­றதும் அமை­தி­யாக நாட்டை புதிய அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­து­விட்டு ஒதுங்கிக் கொண்டேன். நான் அமை­தி­யாக இருந்­தாலும் மக்கள் என்னை அமை­தி­யாக செயற்­பட அனு­ம­திக்­க­வில்லை. அதனால் தான் நான் மக்­களை சந்­திக்க வந்தேன். ஆனால் எனது மீள் வருகை இந்த அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. என்னை கண்டு இவர்கள் அஞ்­சு­கின்­றனர். இவர்­க­ளுக்கு சவா­லான நபர்­களை கைது செய்து சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர். எனது ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சகோதரர் மீது அரசாங்கம் இலக்கு வைத்துவிட்டது. நாமும் இவர்களின் இலக்காக மாறிவிட்டேன். ஆனால் நான் சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக உள்ளேன். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.