இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!

324

Sucide

கொஸ்வத்த – மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வயது மகள் உயிரிழந்துள்ள நிலையில் கிணற்றில் விழுந்த 7 வயது மகளும் தாயும் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.