வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிப்பு!!

294

வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக கடும் மழை பெய்வதால் நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் கொடிப்பிலி கூறினார். நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதியிலும், தாழ்நிலங்களிலும் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள், அவசர உதவிப் பிரிவினர் மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதற்கு இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி முப்படையினரும், பொலிஸாரும் தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

2 3 4 6