புங்­கு­டு­தீவு மாண­வியின் மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் : டக்ளஸ் தேவா­னந்தா!!

275

Douglas Devananda

புங்­கு­டு­தீவில் உயி­ரி­ழந்த மாண­வியின் இல்­லத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா இழப்பால் துய­ருற்­றி­ருக்கும் உற­வு­க­ளுக்கு ஆறு­தல் தெரி­வித்­துள்ளார்.

மாண­வியின் இல்­லத்­திற்கு நேற்று முன்­தினம் விஜயம் மேற்­கொண்ட செய­லாளர் நாயகம் உயிரிழந்த மாண­வியின் பெற்­றோ­ருக்கும் உற­வு­க­ளுக்கும் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளையும் ஆறுதல்க­ளையும் தெரி­வித்துக் கொண்டார்.

புங்­கு­டு­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்தில் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­த­ரத்தில் கல்வி கற்கும் சிவலோகநாதன் வித்­தியா பாழ­டைந்த வீடொன்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.

இத­னி­டையே குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி குற்­ற­வா­ளியை இனம் காணு­மாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.