வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!

283

V

வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றும், நாளையும் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் வவுனியா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

இதற்கமைய கொழும்பு, கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில்கள், யாழ்தேவி கடுகதி ரயில், இரவுநேர தபால் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் இன்றும், நாளையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.