வவுனியா சாந்தசோலை சந்தியில் பேரூந்து விபத்து!!(படங்கள்)

449

வவுனியா ஏ9 வீதியில் சாந்சோலை சந்தியில் பேரூந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாந்தசோலை சந்திக்கருகில் முற்சக்கவண்டியை முந்திச்செல்ல முற்பட்டவேளை முற்சக்கர வண்டியுடன் விபத்துக்குள்ளாகி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்துள்ளது.

சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இப்பேரூந்தில் சாரதி மாத்திரம் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

-படங்கள் பாஸ்கரன் கதீசன் மற்றும் கோபிராம் சிவா-

1 022 03 3 4 58 6 9 10 11