வித்தியாவின் படுகொலைக்கு எதிராக யாழில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

247

யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நல்லூர் ஆலய சுற்றாடலில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் சமூக வலைத்தள இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கொலை சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் யாரும் வாதாடக் கூடாது என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது முதலமைச்சர் மற்றும் யாழ்.அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

4243 45 41 44