மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு!!

331

Mahinda

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற­வுள்­ளது .

இன்று மாலை 4.30 மணி­ய­ளவில் கொழும்பு விகாரமகா­தேவி பூங்கா வளா­கத்தில் இடம் பெற­வுள்ள யுத்த வெற்றி நாள் நிகழ்­வினை இரா­ணுவ ஒன்­றியத்­தினர் ஏற்­பாடு செய்­துள்­ளனர்.
இந் நிகழ்வு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை யில் இடம் பெற­வுள்­ளது.

இந்த வெற்­றிநாள் நிகழ்வில் தேசிய சுதந்­திர முன்­னணி, மக்கள் ஐக்­கிய முன்­னணி, தேசிய ஒருங்கி­ணைப்பு ஒன்­றியம் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­திகள் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யுத்தம் முடி­வ­டைந்த மே மாதம் 18 ஆம் திக­தியை வெற்றி தினம் என்று அனுஷ்­டிக்­காமல் பிரிவினை எதி­ரான தின­மாக அனுஷ்­டிக்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த வைபவம் நாளை­ய­தினம் மாத்­த­றையில் இடம்­பெ­று­கின்­றது. இந்த நிலை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் இன்­றைய நிகழ்வு ஏற்­பாடு செய்யப்பட்டுள்­ளது.

இதே­வேளை இது தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தேசிய சுதந்திர முன்ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் ஆகி­யியோர் இரு­வேறு செய்தியாளர் சந்­திப்­புக்­களில் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

கொழும்பில் இன்று இடம் பெற­வுளள் யுத்த வெற்றி நாள் நிகழ்வின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பங்­கேற்பு அவ­ரது அத­ரவு கூட்­ட­ணியை வலு­வ­டையச் செய்யும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் தெரி­வித்தார். இது தொட­ரபில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று இடம் பெற்­று­ளள்ள யுத்த வெற்றி நிகழ்­விற்கு தேசிய சுதந்­திர முன்­னணி பூரண ஒத்துழைப்பினை வழங்­க­வுள்­ளது.

இதே­வேளை இந் நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கலந்து கொள்­ள­வுள்­ளமை மஹிந்த ஆத­ரவு கூட்­ட­ணிக்கு மேலும் வலுச்­சேர்க்கும் என்றார். யுத்த வெற்­றிக்கு பங்­க­ளிப்பு செய்த அனை­வரும் இன்று இடம் பெற­வுள்ள யுத்த வெற்றி தின நிழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்த்துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். நேற்­றய தினம் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொ­னறின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்­றைய நிகழ்வில் மஹிந்த ராஜ­பக்ஷ கலந்து கொள்ளவுள்ளமையால் யுத்த வெற்றிக்கு பங்களிப்புச் செய்த அனைத்து தரப்பினரும் இந் நிகழ்விற்கு தமது பங்களிப்பினை வளங்குவர் என எதிர் பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.