வவுனியா கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் நினைவேந்தல்!!(படங்கள்)

770

வவுனியா, கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் முள்ளியவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அந்தணர் ஒன்றிச் செயலாளர் பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் அவர்களின் ஆத்மசாந்திக்கான விசேட பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

-பாஸ்கரன் கதீசன்-

1 23 4 5 6