ஹீரோக்களை ஏமாற்றிய ஹீரோக்கள்!

348

Simbu

எதுவா இருந்தாலும் பிரண்டுகிட்ட ஷேர் பண்ணிக்கலாம் – இதுதான் நட்பின் இலக்கணம். அப்படி நம்பி ஷேர் பண்ணிய சில ஹீரோக்கள் இப்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் படம் “வாலு” இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் ஜெய்யை அணுகினாராம் விஜய் சந்தர். ஜெய்யிடம் முழுக்கதையையும் சொல்லி, படத்தில் நடிப்பதற்கு சம்மதமும் வாங்கிவிட்டாராம்.

அந்தக் கதையை ஜெய் தன்னுடைய நண்பனான சிம்புவிடம் எதார்த்தமாக சொல்லப்போக சிம்புவுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம். விளைவு ஜெய்யிடம் கூட சொல்லாமல் விஜய் சந்தரை மடக்கிய சிம்பு நான்தான் இந்தக் கதையில் நடிப்பேன் என ஒத்தக்காலில் நின்றாராம்.

வேறு வழியில்லாமல் விஜய் சந்தரும் ஓ.கே. சொல்லியிருக்கிறார்.ஏன்டா சிம்புவிடம் கதை சொன்னோம் என புலம்பித் தவிக்கிறார் ஜெய்.

அதேபோல “ராஜா ராணி”யில் ஹீரோ கேரக்டரை சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் உருவாக்கினாராம் அட்லீ. முதலில் நயன்தாராவை புக் செய்துவிட்டு பின்னர் சிவகார்த்திகேயனிடம் பேசலாம் என நினைத்து, நயன்தாராவிடம் கதை சொன்னார் அட்லீ.

நயன்தாராவுக்கு கதை பிடித்திருக்கிறது. ஆனால், ஹீரோவைத்தான் பிடிக்கவில்லை. இப்ப ஃபீல்டுக்கு வந்தவன் கூட நான் நடிக்கிறதா என்று நினைத்தவர் ஆர்யாவிடம் கதையைச் சொல்லி, இந்தக் கதையில நாம ரெண்டு பேரும் நடிச்சா தான் நல்லா இருக்கும் என்றிருக்கிறார்.

இதுபோதாதா ஆர்யாவுக்கு? அட்லீயைப் பிடித்து என்ன சொன்னாரோ தெரியவில்லை “ராஜா ராணி”யில் ஆர்யா ராஜாவாகிவிட்டார். இந்த விஷயத்தை லேட்டாகத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட நடிக்கிற வாய்ப்பு போச்சே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இதுபோலவே பல ஏமாற்று வேலைகள் கோடம்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம்.