சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களுக்குள் செல்ல தடை..!

888

sanjiwaஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான சஞ்சீவ பண்டார பல்கலைக்கழக வளாகங்களிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக  குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சஞ்ஜீவ பண்டார கோட்டை நீதவானால் எதிர்வரும் காலங்களில் எந்த வித ஆர்ப்பாட்டங்களுக்கும் கலந்து கொள்ளக்கூடாது என விதிக்கப்பட்ட சட்டத்தை மீறியதாலேயே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதனாலேயே கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திற்குள்ளும் பிரவேசிக்கக் கூடாது எனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.