வவுனியா விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

437

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் அனைத்து பாடசாலை மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாஸ்கரன் கதீசன்-

5 67 8 9 10 3 4