யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)

888

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மோதல் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் செய்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

1112 13 14 15 16 17 18 20 21