புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலைக்கு முன்னால் A9 வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-பாஸ்கரன் கதீசன்-