புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா குருக்கள் புதுக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து இன்று (20.05) காலை பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-விஜயகுமார் சுலக்க்ஷன்-