புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைபிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அத்துடன் வர்த்தக சமூகத்துடன் இணைந்து வவுனியா முச்சகரவண்டிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பாதுகாப்பு கருதி வவுனியா எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-பாஸ்கரன் கதீசன்-