வவனியாவில் பதற்றம் : பொலிசார் குவிப்பு : பரவலாக வீதிகளில் டயர்கள் எரிப்பு!!(படங்கள்)

479

புங்குடுதீவு மாணவியில் கொடூரக் கொலையில் கண்டித்து வவுனியாவில் இன்று(21.05.2015) முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

மாணவியின் கொலைக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் பூந்தோட்டம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில்

வன்முறை ஏற்பட்டால் தடுப்பதற்காக வவுனியா எங்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீதிகளில் குழுவாக நிற்கும் இளைஞர்களை பொலிசார் விரட்டுவதாகவும், டயர் எரிவதைப் புகைப்படம் எடுத்த வவுனியாவிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றினது ஊடகவியலாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பாஸ்கரன் கதீசன்-

1 02 2 03 3 5 7 8 9 10 11 12 13 14 15 16 17P1 P2