புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) பல்வேறு அமைப்புக்கள் இணைந்து வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடாத்துவதற்கு ஒன்று சேர்ந்தனர். ஆனால் பொலிசார் பேரூந்து நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தை நடாத்த அனுமதிக்கவில்லை. இதனால் பொலிசாருடன் மக்கள் வாக்குவாதப்பட்டனர்.
பொலிசார் அனுமதி மறுத்தால் வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருமளவிலான கலக்கத்தடுப்புப் பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இறுதியில் பிரதேசசெயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குருமன்காடுச் சந்திவரை ஊரவலமாகச் சென்றனர்.
இதேவேளை முச்சரவண்டிச் சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர், தனியார் பேரூந்துகள் இயங்கவில்லை, போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மட்டுமே போக்குவரத்தில் ஈடுபட்டன.
மேலும் வவுனியா தபால் நிலைய ஊழியர்கள், நகரசபை ஊழியர்கள், வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-பாஸ்கரன் கதீசன்-