புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக வவுனியா நகரசபை ஊழியர்கள் ஒன்றிணைந்து நகரசபைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம் கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-பாஸ்கரன் கதீசன்-