யாழ். உடுத்துறையில் பதற்றம் : பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் : பொலிஸார் சுட்டதில் ஒருவர் காயம்!!

289

Shotting

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சகிச்சைகளுக்காக மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை, ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை ஏதிர்பார்த்தது போலவே சட்டவிரோத மதுபானம் குறித்த இடங்களில் அகப்பட்டிராத நிலையில் அங்கிருந்தவர்களை பொலிஸார் தாக்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.